ஆதரவாளர்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................


விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த  மூன்று ஆண்டுகளில்  50 ஆயிரம் கோடி ரூபாய் மின்கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாதது.

தமிழ் நாடு மிசரவாரியம்  தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்தி கேட்டு  26.2.2013 அன்று மனு செய்துள்ளது. அதன்படி வருகின்ற மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு மின் நுகர்வோர்களிடம் கட்டண உயர்வு கேட்டுள்ளது. சென்ற ஆண்டு 17000 கோடி இழப்பு என்று சொல்கின்றது மின்வாரியம். அதற்கு முந்தைய ஆண்டு சுமார் 8000 கோடி இழப்பை ஈடு செய்யவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (1000 ரூபாய் கட்டியவர்களுக்கு 1600 வரை கட்டும் அளவுக்கு  மிகக் கடினாமாக உயர்வு செய்யப்பட்டது) 
இந்த ஆண்டு இரண்டு மடங்கு இழப்பு (17000 கோடி இதுக்கு எவ்வளவு மின்கட்டண உயர்வு வரும்?) ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. எனவே கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது.  வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை மின் உயர்வை தள்ளிப் போடும் நோக்கிலும் நினைத்த நேரத்தில் கட்டணம் உயர்த்தவும் திட்டமிட்டே மூன்று ஆண்டுகளுக்கு கட்டண உயர்வுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் தோன்றுகின்றது.  எனினும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் இந்த ஆண்டு ஜூலைக்குள் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்திட வேண்டும். (சென்ற ஆண்டு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைத்தது. மிலிட்டரி வரவழைத்து தான் கூட்டம் மதுரையில் நடந்ததாம் அந்த கூட்டங்களில் கலந்துகொண்டு சொன்ன மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பில்லை என்பது வேறு விஷயம் ). இந்த ஆண்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்குமா? முறையாக முன்னரே அறிவிப்பு இருக்குமா?  அல்லது திடீர் என்று தேதி அறிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாய் (ரகசியமாய்) நடக்குமா?.

விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது.

மின் வாரிய மனுவின் முழு விபரம் காண இந்த இணைப்பை சொடுக்குங்கள் 
 http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf

மக்கள் மன்றத்திற்கும் வலைப் பதிவர்களுக்கும் 
 மின் கட்டண உயர்வு இல்லாமல் இருக்க மின் வாரியம் மின் உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளுடன் ,  மின் இழப்புகளை இழப்புகளை சரிசெய்யவும் மின் வாரிய முன்னாள் பொறியாளர்கள்  உள்ளடக்கிய குழு தயார் செய்த விரிவான அறிக்கை நமது அமைப்பின் மூலம் அளிக்கப்பட்டது. மேலும் அமைப்பின் உறுப்பினர்கள் தனித்த்தனி நபர்கள் வாயிலாக கூட்டம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும்  மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தால் 50 ஆயிரம் கோடி மின் கட்டண உயர்வு தேவையில்லை பொது மக்களை கசக்கிப் பிழியும் மின் கட்டண உயர்வு தவிர்க்கப் படலாம்.

உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். விவாதிக்க தொடர்புக்கு 9444305581 பாலசுப்ரமணியன் 




1 கருத்து:

புரட்சி தமிழன் சொன்னது…

கோப்பை சேமித்துக்கொண்டேன் உபயோகமாக உள்ளது நன்றி! இதில் ஒரு உண்மை தெளிவாக தெறிகிறது அணைத்து மின் நிலையங்களையும் அதன் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி திறனுக்கு அதிகமாக இயக்கியுள்ளார்கள் அதனால் சில பழுதடைந்து இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த அறிக்கையில் உண்மையான எதிர்கால மற்றும் நடப்பு மின் பற்றாகுறை பற்றி எதுவும் குறிப்பிட்ட முக்கியத்துவம் இல்லை. திருமாகோட்டை கேஸ் பிளாண்டின் உற்பத்தி செலவு ரூ 1.61 ஆக உள்ளபோது பேசின் பாலம் கேஸ் பிளண்டின் உற்பத்தி செலவு எப்படி ரூ 16.19 உள்ளது என்று தெறியவில்லை அதில் ஏதோ உள்குத்து உள்ளது.
காற்றாலை மற்றும் சூரிய ஓளி மின் திட்டங்களுக்கான எதிர்கால திட்டமிடல் மற்றும் அதற்க்கான மானியங்கள் ஏதும் இடம்பெறவில்லை.3786 கோடி ரூபாய் டிஸ்ட்டிபூசனில் உள்ள பனியாளர்களின் செலவீனமாக உள்ளது 24 மனி நேரம் மின்சாரம் இருந்தாலும் 4 மனி நேரம் மின்சாரம் இருந்தாலும் இதில் எதுவும் மாறப்போவதில்லை. அனைத்தையும் சொல்லவேண்டுமானால் நான்கு தொடர் பதிவுகளையாவது இட வேண்டும் சுருக்கமாக சொன்னால் போதுமான மின் உற்பத்தி இல்லாத்தே மின்வாரிய நட்டத்திற்க்கு காரணம். இந்த அறிக்கை அரசு நிருவனத்தின் அறிக்கை போல் இல்லை லாப நோக்கத்திற்காக மட்டுமே செயல்படும் ஒரு வெளி நாட்டு நிறுவனம் தயாரித்த அறிக்கைபோல் உள்ளது.