ஆதரவாளர்கள்

திங்கள், 24 ஜூன், 2013

கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ , யாரை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் தர தயாராக இல்லை.

உயர்கல்வி பயில விரும்பும் மாணவனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை என்ற நிலை இல்லாமல் ஆக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட உன்னத திட்டம் கல்விக் கடன் திட்டம். 


இதன்மூலம் எண்ணற்ற ஏழை மாணவர்கள் பயன் பெறுவார்கள் அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்ப நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் கொண்டுவரப்பட்ட திட்டம்.

என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தையே சிதைக்கும் வண்ணம் கல்விக் கடன் யாருக்காக கொண்டுவரப் பட்டது யாரை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் தர தயாராக இல்லை.

மாணவர்களை வங்கிகள் அலைக்கழிப்பதும் கடன் மறுப்பதும் தொடர்கின்றதே புகார் அளித்தும் பலனில்லை ஆகவே இந்தியன் குரல் அமைப்பு இத்திட்டத்தின் நோக்கம் சரியாக செயல்பட உதவிசெய்கின்றது. கல்விக் கடன் மறுக்கப்படும் மாணவர்களுக்கு சட்டப்பூர்வ உதவி செய்கின்றது. சென்ற கல்வியாண்டு 8700 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்க இந்தியன் குரல் வழிகாட்டியுள்ளது.

இந்தியன் குரல் கல்விக்கடன் உதவி முகாம்களை மாவட்டங்கள் தோறும் நடத்திவருகின்றது
 சென்னையில் உதவி மையம் பிரதி மதம் 1 ஆம் தேதியும் 15 ஆம் தேதியும் கும்பத் காம்ப்ளெக்ஸ் 29 ரட்டன் பஜார் சென்னை 600 003 (பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்) முகவரியில் நடைபெறுகின்றது. 9994658672(தீபக்) 

வேலூரில் ராஜா தியேட்டர் பின்புறம் லாங் பஜாரில் உள்ள சண்முக அடிகளார் சங்கம் பிரதி வியாழக் கிழமைகளில்  9443489976

மதுரையில் RBA பில்டிங்க்ஸ் மூன்று மாவடி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் மதுரை பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை தொடர்புக்கு 9865577021 (ராமகிருஷ்ணன்)

உங்கள் ஊரிலும் உதவி மையம் நடத்திட இடவசதி ஏற்ப்படுத்தித் தந்தால்  மாதம் ஒரு நாள் உதவி மையம் நடத்திட பதிவு செய்ய 9444305581

தகவல் உரிமை சட்டம் பயிற்சி உங்கள் ஊரில் நடத்திட 9444305581

ஒவ்வொரு ஆண்டும் குங்குமம் வார இதழ் புதிய தலைமுறை தின மலர் கல்வி உள்ளிட்ட இதழ்களில் இந்தியன் குரல் உதவி விழிப்புணர்வுக் கட்டுரை வெளியிடுவார்கள். அதன் தொடர்ச்சியாக அந்தந்த மாவட்டங்கள் நகரங்களில் வெளியாகும் சிறிய மற்றும் பெரிய பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியிட்டு உதவிக்கு இந்தியன் குரல் தொடர்பு எங்களை எங்களது அனுமதி பெட்ரோ பெறாமலோ வெளியிட்டு விடுவார்கள். அதன் பேரில் வரும் அழைப்புகளுக்கும் யார் அழைத்தாலும் கல்விக் கடன் பற்றிய சந்தேகங்களைப் போக்கி கடன் கிடைக்க உதவி செய்து வருகின்றது இந்தியன் குரல் அமைப்பு என்று குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.

இந்தியத் துணைக்கண்டத்தில் கட்டணம் பெறாமல் நன்கொடை பெறாமல் உறுப்பினர் சந்தா பெறாமல் உதவி மையங்களை நடத்தி அதன் மூலம் தொடர்ச்சியான உதவி செய்வது இந்தியன் குரல் மட்டுமே என்பதில் பெருமை கொள்கின்றோம்.

உதவி மையங்கள் நடத்திடும் இடங்கள் நண்பர்களுடையது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாள்களில் இடத்தை இலவசமாக உபயோகிக்கக் கொடுத்து விடுவார்கள். மற்ற செல்வவினங்கள் அனைத்தும் எங்களது சொந்த உழைப்பின் வருவாயால் ஈடாகின்றது.

 இந்தியன் குரல் அமைப்பு நிர்வாகிகள் நிறுவனர்கள் வாலண்டீர்ஸ் உதவி மையம் நடுத்துனர் பயிற்றுனர்கள் அனைவருக்கும் நிரந்தர வருவாய் வசதி உள்ளது. நிரந்தர வருவாய் வசதி இருந்து மாதம் இரண்டு நாட்கள் அல்லது அதற்க்கு மேல் சமூகத்திற்காக நேரம் ஒதுக்கி சொந்த செலவில் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை செய்து கொள்ளும் வசதியும் எந்த பிரதி பலனும் எதிர்பாராத சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் மட்டும் வாலிண்டீர்ஸ் ஆக தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 9444305581

சேவைகள் நடைபெறும் இடங்கள்

மாவட்ட அலுவலகங்களில் தாலுகா அலுவலகங்களில் திங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல்

மாதம் இரண்டு தினங்கள் உதவி மையத்தில் உதவி செய்வது

பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி கூட்டங்கள் நடத்துவது.












4 கருத்துகள்:

saidaiazeez.blogspot.in சொன்னது…

நல்ல கட்டுரை நண்பரே!
அடுத்த முறை சென்னை வரும் போது உங்களை சந்திக்கிறேன். நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

ராஜி சொன்னது…

ஏழை மாணவச்செல்வங்களுக்கு பயனுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி

VOICE OF INDIAN சொன்னது…

வருகைக்கு நன்றி சைதை அஜீஸ் அவர்களே! உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்தால் பல மாணவர்கள் படிக்க வகை செய்தால் நன்றாக இருக்குமே மூடியுமா என்று பாருங்கள் என்று நட்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

VOICE OF INDIAN சொன்னது…

வருகைக்கு நன்றி ராஜிஅவர்களே! பகிர்ந்தால் பல மாணவர்கள் படிக்க வகை செய்தால் நன்றாக இருக்குமே மூடியுமா என்று பாருங்கள் என்று நட்புடன் கேட்டுக் கொள்கின்றேன்